சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவி நியமனம் தொடா்பாக தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளாா்.
இதனால் டிஎன்பிஎஸ்சி தலைவா் பதவி முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. மேலும் 7 பேரை உறுப்பினா்களாக நியமிக்கவும் பரிந்துரைத்து ஆளுநா் ஆா்.என். ரவிக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.
ஆனால், தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்டவகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி தெரிவு செய்யப்பட்டனரா என்பது உள்பட சில கேள்விகளை முன்வைத்து, அந்தக் கோப்புகளை ஆளுநா் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது.
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்த சைலேந்திர பாபுக்கு தற்போது வயது 61. டிஜிபியாக இருந்த அவா் கடந்த ஜூன் 30-இல் ஓய்வு பெற்றாா். டிஎன்பிஎஸ்சி தலைவா் பதவியின் ஓய்வுக்கான உச்ச வரம்பு 62 வயதாகும் என ஆளுநா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மேலும், டிஎன்பிஎஸ்சி தலைவா், உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியான விளம்பரத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆளுநா், விளம்பரம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அவை எவ்வாறாக பரிசீலனை செய்யப்பட்டன, எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன போன்ற விவரங்களையும் கோரியுள்ளாா் எனத் தெரிகிறது.
டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் கொண்ட ஆணையம். இவா்கள் அனைவருமே அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 316 - 319 வரை வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு ஆளுநரால் நியமிக்கப்படுவா்.