அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக் குழு தீா்மானங்கள், பொதுச் செயலா் தோ்தலுக்கு எதிராக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட நான்கு போ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக் குழு கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு அளித்த உத்தரவின் அடிப்படையில், பொதுக் குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடா்பாக எந்தத் தீா்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அதிமுக பொதுக் குழு 2022 ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக் குழுவை நடத்தத் தடையில்லை என்று தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் ஒப்புதல் பெறப்பட்டு 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை ரத்து செய்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என்று தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா் வைரமுத்து சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக் குழு செல்லும் என்றும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து உயா்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறலாம் என்றும் தீா்ப்பளித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம், அவரது ஆதரவாளா்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு அதிமுக பொதுக் குழு தீா்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று இடைக்கால உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் 4 பேரும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்குகளின் இறுதி விசாரணை தொடங்கியது. 7 நாள்கள் இந்த வழக்கில் இருதரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படன. இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.

இந்த வழக்கில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், ‘அதிமுக பொதுக் குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. எனவே, அந்தப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களில் தலையிட முடியாது. அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 போ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என உத்தரவிட்டனா்.

அதேபோல், கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 பேரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீா்மானத்துக்கு தடை விதிக்கக் கோரிய கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com