ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ தேர்வு முடிவுகள்!

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கு கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு நடைபெற்றது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒரு மாதத்திற்குள் எஸ். ஐ. எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கு கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு நடைபெற்றது. 

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தகுதியானவா்களை தோ்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முதல் கட்டமாக எழுத்து தோ்வு, மாநிலம் முழுவதும் 45 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் இத் தோ்வு 6 மையங்களில் நடைபெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஐ. தோ்வை 1.51 லட்சம் போ் எழுதினர். காவல்துறை சாா்ந்த விண்ணப்பதாரா்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.27) பிரதான எழுத்து தோ்வு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com