சென்னை புறநகர் மின்சார ரயிலின் கடைசிப் பெட்டியில் புகை

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு நிலவியது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் புகை வந்ததால் பரபரப்பு நிலவியது. 

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி புறநகர் மின்சார ரயில் இன்று காலை புறப்பட்டு சென்றது. இந்த ரயில் வில்லிவாக்கம் அருகே வந்தபோது ரயிலின் கார்டு கேபினில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்த ஆர்.பி.எஃப். போலீசார் கார்டு கேபினில் இருந்து வந்த புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com