நிர்வாக சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆவின் பால் விநியோக தாமதம், தரத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் பால் உப பொருள்களின் விலை ஒரே சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், ஆவின் நிறுவன அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.
பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்தவும் ஆவின் நிறுவன சீரமைப்பு குறித்தும் அவ்வபோது ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.