மிக்ஜாம் புயல் எதிரொலி: 3 விமானங்கள் ரத்து

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மிக்ஜாம் புயல் எதிரொலியாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன.

மும்மை, ஹைதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரவிருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் இருந்த புறப்படவிருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.

தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. 

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரம், ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com