4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக ஆவடியில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து நாளை காலை கரையைக் கடக்கவுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ‘மிக்ஜம்’ புயல் காரணமாக, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (டிச. 4) அதாவது இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com