மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரனும் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வீட்டிலிருந்தபோது காலையில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துரை தயாநிதிக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.