த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

மான நஷ்டஈடு கேட்டு  நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென நடிகர் மன்சூர் அலிகான் உணர வேண்டும். தாம் எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கைகளில் தப்பிப்பதற்காகவா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். 

மன்சூர் அலிகான் பேசியதற்காக நடிகை த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அப்போது, தாம் பேசியது தடர்பாக முழு விடியோவையும் தாக்கல் செய்வதாகவும், தம்மை பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும் என மன்சூர் அலிகான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மனு குறித்து நடிகைகள் த்ரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.22ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com