ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீட்புப் பணிகள்: முப்படைகளிடம் உதவி கேட்பு!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முப்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 டிசம்பர் 2023, 5:38 am

DIN

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முப்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வரலாறு காணாத கனமழையால் ரயில், பேருந்து சேவைகள் முடங்கியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்புப் பணிகளை விரைவுப் படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை அளிப்பதற்காக ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையின் உதவிகளை கேட்டுள்ளதாக தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து முதல்கட்டமாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.