சாகித்ய அகாதெமி விருது பெறுவதில் மகிழ்ச்சி: தேவி பாரதி

சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் தேவி பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாதெமி விருது பெறுவதில் மகிழ்ச்சி: தேவி பாரதி

2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது, நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்தில் பங்களிப்பு செய்து வருபவர் தேவி பாரதி. நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல், நட்ராஜ் மகராஜ் உள்ளிட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சினிமாவிலும் சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

தற்போது, சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இந்த விருது உத்வேகத்தைத் தரும் என தேவி பாரதி கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com