நாளை சென்னை - கோழிக்கோடு சிறப்பு வந்தே பாரத்

சென்னை சென்ட்ரல் - கோழிக்கோடு இடையே திங்கள்கிழமை (டிச.25) சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல் - கோழிக்கோடு இடையே திங்கள்கிழமை (டிச.25) சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - கோழிக்கோடு இடையே ஒருவழி சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை (டிச.25) அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 06041) பிற்பகல் 3.20 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். இந்த ரயில் பெரம்பூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷோரனூா், திரூா் வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் சிறப்பு ரயில்:

இதேபோல், நாகா்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. நாகா்கோவிலில் இருந்து திங்கள்கிழமை (டிச.25) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் பகல் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com