அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி மெரினாவிலுள்ள அவரின் நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை வாலாஜா சாலையில் நடைபெற்று வரும் இந்த பேரணியில், துரைமுருகன், டி.ஆர். பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்று வருகிறது.
அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். இதனையொட்டி அண்ணா நினைவிடம் முழுக்க அலங்கரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிறந்த நாள்! 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜரின் புகழ்பாடும் குடியாத்தம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘ஹேக்’! 19,000 ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் பரபரப்பு!

என்ன, இனி இன்ஸ்டாமார்ட்டில் எல்பிஜி சிலிண்டர் வாங்கலாமா?







