தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கியது!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்கியது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கியது!
Updated on
1 min read

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (திங்க்எடு) சென்னையில் இன்று தொடங்கியது.

கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெறும்  கல்விச் சிந்தனை அரங்கைத் தொடங்கி வைத்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய, மாநில அமைச்சா்கள், கல்வியாளா்கள், அரசியல் தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனா்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித், புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com