தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

இன்று முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com