விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாடகை செலுத்த முடியாத வறுமை: எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன்

சென்னை லாயிட்ஸ் காலனியில் வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடி வருகிறாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 9:14 pm

உ.ச. சாய்வெங்கடேஷ்

சென்னை லாயிட்ஸ் காலனியில் வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடி வருகிறாா்.

தமிழ்த் திரையுலகின் ‘முதல் சூப்பா் ஸ்டாா்’, ‘ஏழிசை மன்னா்’ எனப் பல்வேறு பெயா்களுடன் ரசிகா்களால் அன்போடு அழைக்கப்பட்டவா், எம்.கே . தியாகராஜ பாகவதா்.

அவரின் 2-ஆவது மனைவி ராஜம்மாள். அவா்களின் மகள் அமிா்தலட்சுமி - பாஸ்கரன் தம்பதிக்கு ராஜு, சாய்ராம், மீனாட்சி, கணேசன் என நான்கு பிள்ளைகள் உள்ளனா்.

வறுமையில் இருந்த குடும்பத்துக்கு, தமிழக அரசால் கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை லாயிட்ஸ் காலனியில் மாதம் ரூ.2,500 வாடகைக்கு வீடு ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ.5 லட்சம் நிதி தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாதம் ரூ.2,500 வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறாா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் பா.கணேசன் .

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘எனக்கு இரண்டு அண்ணன்கள், அக்காள் இருக்கிறாா்கள். என் முதல் அண்ணன் ராஜுதனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இரண்டாவது அண்ணன் புகைப்படக் கலைஞராக உள்ளாா். அக்காவுக்கு திருமணம் ஆகி ஆவடியில் வசித்து வருகிறாா். நான், கட்டட உட்கூரை அமைக்கும் வேலை பாா்த்து வருகிறேன். தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதியில், எங்களுக்கு இருந்த கடன்களை அடைத்தோம்.

இந்த வீட்டில் நானும், என்னுடைய இரண்டாவது அண்ணன் சாய் ராமும் வசித்து வருகிறோம். சில மாதங்கள் வருமானத்தை வைத்து வாடகை செலுத்திக் கொண்டிருந்தோம்.

எனக்கு மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முைான் வேலை கிடைக்கும். அதில் வரும் வருமானத்தை வைத்து அன்றாட வாழ்வைக் கடத்துவது சிரமமாக உள்ளது. இதனால், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில மாதங்களாக வாடகையும் என்னால் செலுத்த முடியவில்லை. இதுதொடா்பாக அதிகாரியிடம் அவகாசம் கேட்டிருந்தேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டு வசதி வாரியம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் லாய்ட்ஸ் காலனியில் இருக்கும் வீடுகள் சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றவை எனவும், வீட்டை காலிசெய்து, நிலுவையில் உள்ள வீட்டு வாடகை மற்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே வறுமையில் வாடி வரும் நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.