ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெளியூரிலிருந்து பகலில் சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும்!

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2023, 4:14 am

DIN

வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் பெரும்பாலாக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக கோயம்பேடு வந்தடையும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 

இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக வெளியூர்களில் இருந்து பகல் நேரத்தில் சென்னை வரும் அனைத்துப் பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

இதன்படி மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு செல்லும் என்றும் இதன் மூலமாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு இடதுபுறமாக நிறுத்தி பயணிகளை இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.