பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று சென்னை உயா் நீதிமன்றம் முடித்துவைத்தது.
சென்னை உயா் நீதிமன்றம்
சென்னை உயா் நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று சென்னை உயா் நீதிமன்றம் முடித்துவைத்தது.

கடலூா் மாவட்டம், மதனகோபாலபுரத்தைச் சோ்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என மாநில அரசு, டிச. 22-ஆம் தேதி அறிவித்தது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்படவுள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

பொங்கல் தொகுப்புக்காக அரசு நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கரும்பை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனா். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கக் கோரி டிச. 24-ஆம் தேதி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ‘பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்’ என்று தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக்கூறி, அதனை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com