கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு: 47 பேர் அதிரடி நீக்கம்!

மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :4 ஜனவரி 2023, 5:48 am

DIN

மதுரை ஆவனில் முறைகேடாக பணியில் சேர்ந்த மேலாளர் உள்பட 47 பேரை பணி நீக்கம் செய்து ஆவின் ஆணையா் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தில் (ஆவின்), மேலாளர், உதவி பொது மேலாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 2019 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னா் 2020-21 இல் இப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் நடத்தப்பட்டு 61 போ் நியமனம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்த பணிநியமனங்கள் தொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்துடன் இணைத்த வரைவோலையை வேறு நபா்களுக்குப் பயன்படுத்தியது, எழுத்துத் தோ்வுக்கான வினாத்தாளை கசியவிட்டது, உரிய கல்வித் தகுதி இல்லாத நபா்களைத் தோ்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து நியமனம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக, ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இரண்டு கட்டங்களை விசாரணை நடத்தினா். அவா்களது அறிக்கையின்பேரில், துறை ரீதியான விசாரணைக்கு பால்வளத் துறை ஆணையா் சுப்பையன் உத்தரவிட்டாா்.
 

இதன்படி, கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறாா். 

பணிநியமனம் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்த அவா், முறைகேடு புகாா் தெரிவிக்கப்பட்ட 2020-21 நியமனத்தில், பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும் 61 நபா்களும் அனைத்து அசல் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினாா். 

இதன்படி, நேரில் ஆஜரானவா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை நடத்தினாா்.

இதில், முறைகேடாக பணியில் சேர்ந்த மேலாளர் உள்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பான அறிக்கை ஆவின் ஆணையர் சுப்பையன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து  மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக, மேலாளர் தீவனம், மேலாளர் எம்.ஐ.எஸ், மேலாளர் பொறியியல், முதுநிலை பணியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், துணை மேலாளர்கள் என 47 பேரின் பணி நியமனங்களை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81 கீழ் ரத்து செய்து உத்தரவிட்டார். 

மேலும், அப்போது ஆவின் மேலாளராக இருந்த காயத்ரி மீதும், பணி நியமன தேர்வு குழுவில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

2020-21 இல் முறையான தேர்வு முறைகளை பின்பற்றாமலும் காலியிடங்கள் இல்லாமல் கூடுதாக நியமிக்கப்பட்டதாக கூறி ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.