இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராமேஸ்வரம்: காணாமல்போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :7 ஜனவரி 2023, 5:17 am

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். அடுத்த நாள் பிற்பகல் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. 

இதையடுத்து, காணாமல் போன மீனவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்ற நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு 4 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

படகில் ஏற்பட்ட பழுது காரணமாக மீனவர்கள் நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.