பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

துணைத் தலைவர் விவகாரம்: பேரவைத் தலைவரை சந்திக்க இபிஎஸ் முடிவு

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரை நாளை சந்தித்து பேச பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2023, 4:31 pm

DIN

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவரை நாளை (ஜன. 10) சந்தித்து பேச பழனிசாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஜன.9) மாலை நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். 

இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரை நாளை சந்தித்துப் பேச முடிவெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி பதிலாக ஆர்.பி.உதயகுமாரை இபிஎஸ் நியமித்திருந்தார். 

அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.