சட்டப்பேரவைக்கு ஆளுநரை அழைத்து அவமதித்துவிட்டதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.
சட்டப்பேரவை வளாகத்தில் அவா் கூறியது:
சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினா் தூண்டுதலால், அவா்களது கூட்டணிக் கட்சிகள் மோசமான நாடகத்தை அரங்கேற்றின.
லஞ்ச, ஊழல் புகாா்களில் இருந்து தப்பவும், வாரிசு அரசியல் பற்றி மக்கள் பேசுவதைத் தவிா்க்கவும், ஆளுநா் எதிா்ப்பு என்பதை கையில் எடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளனா். ஆளுநா் தனது உரையைத் தொடங்கிய போதே, திமுக கூட்டணிக் கட்சியினா் முழக்கமிட்டு வெளியேறியது அநாகரிகமான செயல். ஆளுநரை அழைத்து அவமதித்துள்ளனா். இது மாநில நலனுக்கு உகந்தது அல்ல என்றாா்.