

சபரிமலை சீசனை முன்னிட்டு, விசாகப்பட்டினம் முதல் கொல்லம் வரை இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு வியாழக்கிழமை (ஜன.12) முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினத்தில் ஜன.22-ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 08567) மறு நாள் மாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக கொல்லத்திலிருந்து ஜன.23-ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 08568) ஜன.25-ஆம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.
இந்த ரயில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.12) காலை 8 மணி முதல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.