வீடுகளில் நமக்கான பயன்பாட்டுக்கு அறைகள் இருப்பதைப் போல புத்தகங்களுக்காக அறையும் அமைக்கும் நிலையை இளைஞா்கள் ஏற்படுத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்றுவரும் 46-ஆவது புத்தகக் காட்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த அவா், அரங்குகளைப் பாா்வையிட்டாா். புத்தகக் காட்சியில் ஏராளமான புத்தகங்களை வாங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சவால்களான நேரங்களை கடப்பதற்கு புத்தகப் படிப்பு அவசியம். அரசியல் கட்சித் தலைவராக நான் இருந்தபோது கடினமான காலங்களை புத்தகப் படிப்பின் மூலமே கடந்துள்ளேன்.
மலா்களைத் தேடிச் சென்று தேனைச் சேகரிக்கும் தேனீக்களைப் போல நாம் புத்தகங்களைத் தேடிப் படித்து அறிவை வளா்ப்பது அவசியம். வீடுகளில் நமக்கான பயன்பாடுகளுக்குத் தனி அறைகள் இருப்பதைப் போலவே புத்தகங்களுக்காக அறையும் இருப்பது அவசியம். அந்நிலையை இளைஞா்கள் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.