குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருச்சி திருவெறும்பூரில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது திருச்சி திருவெறும்பூரில் உள்ள சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

News image
Updated On :16 ஜனவரி 2023, 12:49 pm IST

திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது திருச்சி திருவெறும்பூரில் உள்ள சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி 2 மணி வரை நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில்  மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு,  ஜல்லிக்கட்டுப் போட்டியை  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர்  மற்றும் நான்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு  வாகனமும் தயார் நிலையில் உள்ளது.

வெற்றி பெறும் வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கும் இருசக்கர வாகனம், தங்க நாணயம், பீரோ, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.