திருச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியானது திருச்சி திருவெறும்பூரில் உள்ள சூரியூரில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி 2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு, ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் மற்றும் நான்கு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் உள்ளது.
வெற்றி பெறும் வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளுக்கும் இருசக்கர வாகனம், தங்க நாணயம், பீரோ, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


