‘இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை’: நடிகர் சரத்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
சரத்குமார் (கோப்புப் படம்)
சரத்குமார் (கோப்புப் படம்)
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழப்பை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 

அதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எந்த கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com