படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினியை, அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து பேசியுள்ளார்.
மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின்போது திரைத்துறை, அரசியல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். லைகா நிறுவனம் சாா்பில் ‘லால் சலாம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தை நடிகா் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வா்யா இயக்குகிறாா்.
படத்தின் காட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 2-ஆவது கட்டமாக கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறாா். இதனிடையே, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அவா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.