கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 313வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித் துறை) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் (பொ) ஜெயா , கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, திமுக ஒன்றிய செயலர் ராதா கிருஷ்ணன், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சேசு பால்ராயா , கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தங்கையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: பள்ளிகளில் ஜாதி, மத விவரங்களை கேட்கக் கூடாது!
வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களான வனஜா, ராஜராஜேஸ்வரி, ராணி, மீனாட்சி தேவி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.