கோவில்பட்டியில் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்டோர்.
கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உள்ளிட்டோர்.
Published on
Updated on
1 min read

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 313வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித் துறை) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோட்டாட்சியர் (பொ) ஜெயா , கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி, திமுக ஒன்றிய செயலர் ராதா கிருஷ்ணன், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சேசு பால்ராயா , கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தங்கையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்களான வனஜா, ராஜராஜேஸ்வரி, ராணி, மீனாட்சி தேவி ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com