புதுகை மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடைபெற்றது.
மகளிர் நலத்திட்டங்களின் பயனாளிகளிடம் கமிஷன் பெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன், ஆய்வாளர் பீட்டர் உள்ளிட்டோர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.