தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை-பெங்களூரு விரைவு ரயிலில் புகை!

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

News image
Updated On :13 ஜூலை 2023, 9:46 am

DIN

வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை‌ காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்து விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ரயில் என்ஜினிலிருந்து திடீரென பெருமளவில் புகை வெளியானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், புகை வந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேக் பழுது காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.