வேலூர் அருகே சென்னை - பெங்களூரு விரைவு ரயில் என்ஜினிலில் வெளியான புகை காரணமாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் காட்பாடியை அடுத்து விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது ரயில் என்ஜினிலிருந்து திடீரென பெருமளவில் புகை வெளியானது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், புகை வந்த இடத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பிரேக் பழுது காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



