இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர திருவிழாவில் முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், பெரியாழ்வாா் மங்களாசாசனம், 5 கருட சேவை என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றன. 5 ஆம் நாள் விழாவில் பெரிய பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றது. அன்று இரவு நடந்த கருட சேவையில் பெரிய பெருமாள், ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், ஸ்ரீனிவாச பெருமாள், சுந்தரராஜபெருமாள் ஆகியோர் தனிதனியாக கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.