எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தாமிரவருணியில் மூழ்கி மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிரிழந்த தினம்: கட்சியினர் மலரஞ்சலி

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :2 பிப்ரவரி 2024, 8:11 am IST

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கடந்த 1999ஆம் ஆண்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஜூலை 23ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியின்போது போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது தாமிரவருணியில் மூழ்கியும், பலத்த காயமடைந்தும் 17 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொழிலாளர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தாமிரவருணி நதியில் பல்வேறு கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பிலும் தாமிரவருணியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி மாநகரில் வழக்கத்தைவிட கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.