திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கடந்த 1999ஆம் ஆண்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஜூலை 23ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியின்போது போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது தாமிரவருணியில் மூழ்கியும், பலத்த காயமடைந்தும் 17 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொழிலாளர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தாமிரவருணி நதியில் பல்வேறு கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பிலும் தாமிரவருணியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி மாநகரில் வழக்கத்தைவிட கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



