காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பங்களை துல்லியமாக பதிவு செய்ய அறிவுறுத்தல்!

சென்னை ராயபுரம், சிந்தாதரிப்பேட்டை பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். 

News image

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா

Updated On :24 ஜூலை 2023, 3:25 pm

DIN

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யும்படி தன்னார்வலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை ராயபுரம், சிந்தாதரிப்பேட்டை பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். 

இந்த சமுதாய கூடத்தில் 3 நியாய விலைக் கடைகளுக்கான 6 முகாம்கள் நடைபெறுவதையும், தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பங்கள் பதிவு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு, அங்கு வருகை தந்த மக்களிடம் கலந்துரையாடினார். 

இந்த முகாமில் 1 நியாய விலைக் கடைக்கான 3 முகாம்கள் நடைபெறுவதையும், விண்ணப்பங்கள் பதிவு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் தன்னார்வலர்களிடம்  விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்திடும்படியும் தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.