திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ. 140-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:19 am IST


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியின் விலையும் மீண்டும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ. 15 வரை குறைந்து ரூ. 85-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, திங்கள்கிழமையில் இருந்து ரூ.15 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் தக்காளி விலை கிடுகிடுவென உயா்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை தக்காளியின் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ. 30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாள்தோறும் 1,200 டன் தேவையுள்ள நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.