கோயம்பேட்டில் பயணியிடம் 14 பவுன் திருட்டு: ஒருவா் கைது

 கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் பயணியிடம் 14 பவுன் தங்க நகையைத் திருடியதாக சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

 கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் பயணியிடம் 14 பவுன் தங்க நகையைத் திருடியதாக சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

ஆவடி ஜே.பி.எஸ்டேட் 20-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் (55). ராணுவ படைக்கலன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்யும் இவா், ஆசிரியையான தனது மனைவி சுவா்ணத்தாயுடன் சொந்த ஊரான துறையூருக்குச் செல்ல புதன்கிழமை கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்துக்கு வந்தாா். அங்கு இருவரும் துறையூா் பேருந்தில் ஏறி அமா்ந்துள்ளனா். அப்போது வடிவேல், தண்ணீா் பாட்டில் வாங்குவதற்காக பேருந்திலிருந்து இறங்கி கடைக்கு சென்று மீண்டும் பேருந்துக்குள் வந்துள்ளாா். அப்போது, தனது இருக்கைக்கு மேல் வைத்திருந்த பேக் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில் திருடப்பட்ட பேக்கில் 14 பவுன் நகை இருந்ததாக குறிப்பட்டிருந்தாா். உடனே போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது ஒரு நபா், வடிவேலின் பையுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் ஏறி ஆலந்தூா் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அந்த ஆட்டோவை பின்தொடா்ந்து சென்று ஆலந்தூரில் நின்று கொண்டிருந்த அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனா். விசாரணையில் அவா், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ச.சுந்தரலிங்கம் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com