கல்லூரியில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரியில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகைப் பெற விரும்பும் கல்லூரி மாணவா்கள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சென்னை மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.