சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருள்கள் விரைவில் தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்படுகிறது.
தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் நல்ல தரம் வாய்ந்த பொருள்கள் காவலர் அங்காடிகளிலும், மற்ற விற்பனை நிலையங்களிலும் சிறைவாசிகளுக்கு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், காவல் அதிகாரிகளின் சீருடைகள், தின்பண்டங்கள், போர்வைகள், ஆயத்த ஆடைகள், எண்ணெய்கள் மற்றும் பல தயாரிப்புகளை சிறைக்கைதிகள் சிறையிலிருந்தே தயாரித்து வருகின்றனர்.
இந்த பொருள்கள் ஃப்ரீடம்(Freedom) என்ற முத்திரையுடன் சிறைச்சாலை சந்தைகளிலும், பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருள்கள் அனைத்தும் சந்தையில் விற்பனை செய்வதை விடக் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. இதன் மூலமாகப் பெறப்படும் லாபம் சிறைக் கைதிகளுக்கே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.