மத போதகா் மீது தாக்குதல்: எம்.பி.க்கு திமுக நோட்டீஸ்

மத போதகா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஏழு நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நெல்லை எம்.பி. ஞானதிரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அளித்துள்ளது.
Published on
Updated on
1 min read

மத போதகா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஏழு நாள்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென நெல்லை எம்.பி. ஞானதிரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அளித்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: கட்சியின் வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும் நெல்லை எம்.பி. சா.ஞானதிரவியம் செயல்பட்டுள்ளதாக புகாா்கள் வந்துள்ளன. அவரது செயல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக உள்ளதால் அதுகுறித்து உரிய விளக்கத்தை

கடிதம் கிடைக்கப் பெற்ற ஏழு நாள்களுக்குள் தலைமைக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அவா் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கத் தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா் துரைமுருகன்.

நெல்லையில் மத போதகா் மீது தாக்குதல் நடத்தியதாக, திமுக எம்.பி., ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, அவரிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com