கரோனா காலத்தில் தன்னுயிரையும் கருதாமல் பணிபுரிந்த போக்குவரத்துத் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை ஒதுக்கியது போக்குவரத்துத் துறை. அதே வேளையில் 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையாக ரூ.171.05 கோடி வழங்கவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
14வது ஊதிய ஒப்பந்தத்தை 2019 முதல் அமல்படுத்தி ஊதிய உயர்வு அளித்து தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது.