தில்லியைச் சோ்ந்த 23 வயது பெண் கும்பகோணத்தில் நடைபெற்ற வங்கி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு, டிசம்பா் 2-ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு வந்தாா். பின்னா், சென்னையிலிருந்து ரயில் மூலம் கும்பகோணத்துக்கு அன்றிரவு 9.30 மணிக்குச் சென்றாா். அங்கிருந்து வங்கி பயிற்சி வகுப்பு நடைபெறும் விடுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆட்டோ ஓட்டுநா் குருமூா்த்தி சம்பந்தப்பட்ட விடுதிக்குச் செல்லாமல், வேறு பாதையில் சென்றதால், சந்தேகமடைந்த இளம்பெண் ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்றாா்.