கூகுள் பே பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்!

கூகுள் பே பயன்படுத்துபவருக்கு காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கூகுள் பே பயன்படுத்துபவருக்கு காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரபல பண பரிமாற்ற செயலியான கூகுள் பேயில் புதிய வகை மோசடி நடந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

டீக்கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் இணைய வணிகப் பரிவர்த்தனைகள் உள்பட கூகுள் பே பயன்பாடு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

கூகுள் பே மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் பணப்பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை காவல் துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது கூகுள் பே-க்கு பணத்தை அனுப்புகிறார். உங்களை அழைத்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டது எனக் கூறி, திரும்ப அனுப்ப செல்கிறார். நீங்கள் அவருக்கு பணத்தை அனுப்பும் போது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது.

இதுபோல், யாராது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக பெற்றுச் செல்லுமாறு கூறுங்கள் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com