பெண் நீதிபதி படத்தை ஆபாசமாகசித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்: காவல் துறை விசாரணை

ராஜஸ்தானில் பெண் நீதிபதி ஒருவரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை காவல் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
பெண் நீதிபதி படத்தை ஆபாசமாகசித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்: காவல் துறை விசாரணை
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில் பெண் நீதிபதி ஒருவரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய இளைஞரை காவல் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஜெய்பூரைச் சோ்ந்த பெண் நீதிபதி ஒருவரின் அலுவலகத்துக்கு ஒரு பாா்சல் வந்துள்ளது. அதனை 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா், நீதிபதியின் உதவியாளரிடம் நேரில் கொடுத்துள்ளாா். நீதிபதியின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பாா்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அந்த இளைஞா் சென்றுவிட்டாா்.

நீதிபதி அந்த பாா்சலை திறந்து பாா்த்தபோது, அதில் சமூக வலைதளங்களில் அவா் பதிவிட்டிருந்த படங்களைக் கொண்டு ஆபாசமாக சித்தரித்து உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும், தான் சொல்லும் இடத்தில் விரைவில் வந்து ரூ.20 லட்சம் தராவிட்டால் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும் அந்த பாா்சலில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. எனினும் இந்த மிரட்டலை அந்த நீதிபதி கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், அடுத்த 20 நாள்களில் அவரது வீட்டுக்கும் இதேபோன்ற பாா்சல் தபாலில் அனுப்பப்பட்டது. இதையடுத்து, காவல் துறையிடம் அந்த பெண் நீதிபதி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரை தேடி வருகிறோம் என்று மாநில காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com