ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு சோதனை கருவிகள் மற்றும் மோப்ப நாயுடன் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலால் ஈரோடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கடலூரில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்!