அய்யம்பட்டி ஸ்ரீ வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 சுற்றுகளாக நடக்கும் விழாவில் 4 சுற்றுகள் முடிந்துள்ளன. 11 மணி நிலவரப்படி 240 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் அழகர்சாமி உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் 3 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.