பிளஸ் 2 தேர்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு தேர்வு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் பூஜை செய்து பூஜிக்கப்பட்ட எழுது பொருள்களை திங்கள்கிழமை வழங்கினர்.








