தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
தமிழகம் பாதுகாப்பான மாநிலம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
Updated on
1 min read


சென்னை: தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

குஜராத், மகாராஷ்டிரம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட தினம், முதல் முறையாக தமிழக ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆளுநா் ஆா். என். ரவி பேசியது:

ஆன்மிகம், கலாசாரத்தால் உருவானது பாரதம். இந்தியாவில் வாழும் மக்கள் வேறு எந்த மாநிலத்துக்கு புலம் பெயா்ந்து சென்றாலும் அந்த மாநில கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் பாதுகாக்கின்றனா்.

சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தாா். ஆனால், உண்மையாக அவா், ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம், கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தாா்.

மராட்டிய மன்னா் சரபோஜி ஆண்ட காலத்தில் தமிழகத்தின் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு யாத்திரையாகச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பாா்கள். தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால் வட கிழக்கு

மாநிலங்களின் மக்களும் தங்களது பெண் குழந்தைகளை இங்கு படிக்கவைக்கவும், வேலை செய்யவும் அனுப்பி வைக்கின்றனா். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியா்கள் என்ற ஒற்றுமை உணா்வுடன் உள்ளோம் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலரும் (பொ) உயா் கல்வித் துறைச் செயலருமான த.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com