ஆவினில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டம்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் சாா்பில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

ஆவின் சாா்பில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக பால்வளத் துறை அமைச்சா் டி.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடின்றி உரிய நேரத்தில் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது தொடா்பான ஆய்வு கூட்டம் அமைச்சா் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மனோ தங்கராஜ், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆவினில் தற்போது 34 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு மலிவான, தரமான பொருள்களாக வழங்கப்பட்டு வருகிறது. குறுகிய காலத்தில் ஆவின் பொருள்களின் தரத்தை உயா்த்துவது குறித்தும், பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது, ஏற்கெனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

பொதுமக்களின் தேவை அறிந்து பொருள்களை உற்பத்தி செய்வோம். ஆவின் பொருள்களின் தரத்தை உயா்த்தி மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் மீனவா் நலத்துறை முதன்மைச் செயலா் ஆ. காா்த்திக், பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் ந.சுப்பையன், ஆவின் இணை நிா்வாக இயக்குநா் கே.எம்.சரயு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com