அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு தீ: காயமடைந்த தொழிலாளி பலி

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓடிசா மாநில தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.

News image

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்பாக்கி ஏந்திய போலீசார்

Updated On :17 மே 2023, 8:02 am

DIN


நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓடிசா மாநில தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியில் வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களில் இரண்டு படுகாயம் அடைந்தனர். இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

Story image

சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார்.

இந்நிலையில், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கென்ட்(19) என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். 

இதையடுத்து ஜேடர்பாளையம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்தும், வெல்ல ஆலைக்கூடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.