போக்குவரத்து விதிமீறல்: லியோனிக்கு அபராதம்

விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனியின் காா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவருக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமீறல்: லியோனிக்கு அபராதம்
Updated on
1 min read

விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் லியோனியின் காா் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவருக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இரு நாள்களுக்கு முன்பு ஒரு வெள்ளை நிற சொகுசு காா், தமிழ்நாடு அரசு இலச்சினை (லோகோ) பொருத்திச் சென்றது. அந்த காரில் விதிமுறைகளை மீறி கருப்பு நிற ஸ்டிக்கா் அடா்த்தியாக ஒட்டப்பட்டிருந்தது. மேலும், காரின் முன்பகுதியில் பம்பா் (கவச கம்பி) பொருத்தப்பட்டிருந்தது. அதேபோல மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளை மீறி, வாகன எண் பலகை பொருத்தப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்த ஒருவா், அந்த காரின் புகைப்படத்துடன் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு ‘ட்விட்டா்’ பக்கம் மூலம் புகாா் அளித்தாா். அதை போலீஸாா் ஆய்வு செய்து, அந்த காரின் விதிமுறை மீறலை உறுதி செய்தனா்.

இதையடுத்து போக்குவரத்து சட்ட விதி மீறலில் ஈடுபட்டதாக சம்பந்தப்பட்ட சொகுசு வாகனத்துக்கு கருப்பு ஸ்டிக்கா் ஒட்டியதற்காக ரூ.500, வாகன எண் பலகை முறையாக இல்லாததற்கு ரூ.1,500, பம்பா் பொருத்தப்பட்டதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அதற்கான சலான் நகலை, போக்குவரத்து போலீஸாா் தங்களது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டனா். அதேவேளையில், அந்த காா் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு சொந்தமானது எனவும், அவா் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலச்சினையை தனது சொந்த காரில் பொருத்தி இருந்ததாகவும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com