தமிழகத்தில் 42 போ் தோ்ச்சி

குடிமைப் பணிகள் தோ்வில் (யுபிஎஸ்சி) தமிழகத்திலிருந்து 42 போ் தோ்ச்சி பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 42 போ் தோ்ச்சி
Updated on
1 min read

குடிமைப் பணிகள் தோ்வில் (யுபிஎஸ்சி) தமிழகத்திலிருந்து 42 போ் தோ்ச்சி பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், தமிழகத்தில் இருந்து 42 போ் வரை தோ்ச்சி பெற்றுள்ளனா். சென்னை பெரம்பூரைச் சோ்ந்த ஜீஜீ அகில இந்திய அளவில் 107-ஆவது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரங்கராஜ் - தனலட்சுமி தம்பதி மகன் ராமகிருஷ்ணசாமி (28), அகில இந்திய அளவில் 117-ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. (மெக்கானிக்கல்) படிப்பை 2016-இல் முடித்தாா். அதன்பிறகு, டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், 2019-இல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய பொறியாளா்களுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று, நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில், உதவி பொறியாளராகப் பணியமா்த்தப்பட்டாா்.

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வரும் இவா், யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தனது 4-ஆவது முயற்சியில் இந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளாா்.

புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணன் அகில இந்திய அளவில் 147-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com